ஈரானுக்கு ஏன் உதவவில்லை; காரணத்தை கூறுகிறார் புடின்

மாஸ்கோ: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், 11வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதற்கிடையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது.


எப்போதும் ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடைய ரஷ்யா, இந்த விவகாரத்தில் வெறும் கண்டனம் மட்டும் தெரிவித்துள்ளது. இது, ஈரான் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏன் களமிறங்கவில்லை என்ற நிருபர்களின் கேள்விக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று கூறியுள்ளதாவது:


இஸ்ரேலில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். இஸ்ரேல் இன்று ரஷ்ய மொழி பேசும் தேசம். ரஷ்யாவின் சமகால அரசியலில் இதை நிச்சயமாக நாங்கள் கருத்தில் கொள்வோம்.


எனவே, இஸ்ரேல் - ஈரான் சண்டையில் நடுநிலை என்பதே எங்கள் நிலைப்பாடு. அதே சமயம் ரஷ்யா, முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் நீண்டகால நண்பன். ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement