மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கனமழை கொட்டியது. அதனால், மின் தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை, 6:00 மணிக்கு மழை விட்ட பின்னும், மின் வினியோகம் துவங்கவில்லை.

மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கோம்பைக்காடு பகுதியில் மின்சார ஒயர் அறுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின், சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு
ஆளாகினர்.

Advertisement