மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கனமழை கொட்டியது. அதனால், மின் தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை, 6:00 மணிக்கு மழை விட்ட பின்னும், மின் வினியோகம் துவங்கவில்லை.
மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கோம்பைக்காடு பகுதியில் மின்சார ஒயர் அறுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின், சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு
ஆளாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயி மர்ம மரணம் : போலீசார் விசாரணை
-
அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்
-
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு
-
முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
-
பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
-
ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
Advertisement
Advertisement