தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
நாமக்கல், நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 545 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. பல நாட்களாக, 540 காசாக நீடித்து வந்த நிலையில், இரண்டு நாட்களில், முட்டை கொள்முதல் விலை, 10 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 610, ஐதராபாத், 530, விஜயவாடா, 550, பர்வாலா, 483, மும்பை, 585, மைசூரு, 595, பெங்களூரு, 590, கோல்கட்டா, 600, டில்லி, 505 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ, 102 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ, 108 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்பட்டது.
மேலும்
-
விவசாயி மர்ம மரணம் : போலீசார் விசாரணை
-
அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்
-
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு
-
முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
-
பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
-
ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு