செஞ்சியில் 40 ஆண்டு கால கல்லுாரி கனவு... புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு தயார்

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் 90 சதவீதம் விவசாயம் சார்ந்த ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் நிறைந்த பகுதியாக செஞ்சி இருந்தது.
தமிழக அரசியல் கட்சிகள் கல்வியில் காட்டிய அக்கறையினால் பள்ளிகள் துவங்கப்பட்டு கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமானோருக்கு மேல்நிலை வகுப்பு வரை கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. ஆனால், உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக பெண்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை இருந்தது.
கடந்த 15 ஆண்டுகளில் துவங்கிய தனியார் கல்லுாரிகளில் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் கல்வி கற்று வந்தனர். இதிலும் சேர்ந்து படிக்க முடியாத ஏராளமானவர்கள் கல்வி வாய்ப்பை இழந்து வந்தனர். செஞ்சி பகுதியில் அரசு கல்லுாரி துவங்க வேண்டும் என கடந்த 40 ஆண்டு காலமாக அரசியல் கட்சிகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு, தற்போதைய எம்.எல்.ஏ., மஸ்தான் பரிந்துரையின் பேரில், முதல்வர் ஸ்டாலின் கல்லுாரிக்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக கல்லுாரி இயங்கி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் முதல் பேட்ஜ் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறி விட்டனர். தற்போது பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.பி.ஏ., வகுப்புகள் உள்ளன. இதில் 280 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மெயின் ரோட்டில் சிட்டாம்பூண்டி ஊராட்சியில் 13.71 கோடி ரூபாய் மதிப்பில் கல்லுாரிக்கான புதிய கட்டடம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதன் மூலம் செஞ்சி நகர மக்களின் 40 ஆண்டு கனவு நிறைவேறும் நாள் நெருங்கியுள்ளது.
செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய இரண்டு தாலுகாவுக்கும் சேர்ந்து ஒரே அரசு கல்லுாரியாக இருப்பதால் ஏராளமான மாணவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தற்போதுள்ள மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, புதிய பட்ட படிப்புகளை சேர்த்து மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை இரு மடங்காக அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதலுக்கு ராணுவம் ஒப்பந்தம்
-
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு
-
தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!
-
போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்
-
மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்