போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்

வாஷிங்டன்: போர் நிறுத்தத்தை ஈரான், இஸ்ரேல் நாடுகள் மீறக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
@1br12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று விளக்கம் கூறியது.
சிறிதுநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
போர் நிறுத்தம் தற்போது முதல் அமலுக்கு வந்துவிட்டது. அதை தயவு செய்து மீறாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தியானம், பிரார்த்தனை - எது சிறந்தது?
-
விமானப் படைக்கு 6 தேஜாஸ் விமானங்கள்: போர் விமான தயாரிப்பு நிறுவனம் தகவல்
-
வாயில் வடை சுடும் தி.மு.க., எடுத்த நடவடிக்கை என்ன? அண்ணாமலை கேள்வி
-
தமிழகத்தில் நிதி நெருக்கடியா? சென்னை ஐகோர்ட் காட்டம்
-
22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்த நமது ராணுவம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
சட்டசபை தேர்தல் முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா? மீண்டும் கேட்கிறார் ராகுல்
Advertisement
Advertisement