நலத்திட்ட உதவிகள் வி.சி., தலைவர் வழங்கல்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் இ சேவை மையம் துவக்க விழா நடந்தது. சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை 7 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.

விழாவில் ரவிக்குமார் எம்.பி., மாநில விவசாய அணி பசுமைவளவன், மாவட்ட செயலாளர் மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement