பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

மணிலா; பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.



அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


10 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் தொடக்கத்தில் 7.97 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 129.83 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Advertisement