ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்

டில்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் முக்கிய கட்டமாக, ஈரானில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை பத்திரமாக டில்லி அழைத்து வரப்பட்டனர்.
ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலியாக அந்நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஈரானின் மஷாஹத்தில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம், ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
விமான நிலையம் வந்த அவர்கள், மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். இந்த விவரத்தை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது வரை மொத்தம் 2,295 இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தமது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும்
-
போர் நிறுத்தத்தை மீறினால் கடும் பதிலடி: ஈரானுக்கு, இஸ்ரேல் எச்சரிக்கை
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதலுக்கு ராணுவம் ஒப்பந்தம்
-
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு
-
தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!
-
போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்