போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல், ஈரான்: டிரம்ப் கண்டிப்பு

வாஷிங்டன்: போர் நிறுத்தத்தை இஸ்ரேலும், ஈரானும் மீறியுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வந்தன. இரு நாடுகளும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி தாக்குதல் நடத்தின. இதனிடையே இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
பிடிக்கவில்லை
இது தொடர்பாக நெதர்லாந்தில் நடக்கும் நேடோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க கிளம்பும் முன்னர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன. ஒப்பந்தம் போட்ட உடன் இஸ்ரேல் குண்டுகளை வீசியது. நீண்ட காலமாக கடினமாக சண்டையிடும் நாடுகள் நம்மிடம் உள்ளன. என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை.
போர் நிறுத்த மீறவை வேண்டுமென்றே செய்ததாக தெரியவில்லை. இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது எனக்கு பிடிக்கவில்லை. அதனை தடுக்க முடியுமா என பார்ப்பேன்.
ஒப்பந்தம் போட்டதும் உடனே ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியது பிடிக்கவில்லை. அவர்கள் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியது இல்லை. பழிவாங்கல் அதிகமாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. நியாயமாகச் சொன்னால், இஸ்ரேல் நிறைய ஆயுதங்களை பயன்படுத்தியது. போர் நிறுத்தத்தை ஈரான் மீறியதாக இஸ்ரேல் நினைத்ததாக நான் கேள்விப்பட்டேன். இதனை நாங்கள் விரும்பவில்லை. இஸ்ரேலின் நிலைப்பாடு எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@அப்போது, டிரம்ப் சில ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளை திட்டினார்.block_B
@block_Y@
முன்னதாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இஸ்ரேல் குண்டுகளை வீசக்கூடாது. இதனை செய்தால்,அது பெரிய விதிமீறல் ஆகும். உங்கள் பைலட்களை நாட்டிற்கு அழைத்து வாருங்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.block_Y
@quote@
மற்றொரு பதிவில், ஈரானை இஸ்ரேல் தாக்கப்போவது கிடையாது. அனைத்து விமானங்களும் தாய்நாடு நோக்கி திரும்பி உள்ளன. யாரும் பாதிக்கப்படபோவதில்லை. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.quote
@block_G@
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். போர் நிறுத்தம் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.block_G



