ரூ.1.16 கோடியில் சின்ன போரூரில் நுாலகம்

சின்ன போரூர், வளசரவாகத்தில் உள்ள ஏராளமான வாலிபர்கள் மற்றும் மாணவர்கள், அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்கள் தினப்படி வந்து, ஓரிடத்தில் அமர்ந்து படிக்க வசதி குறைவாக இருந்தது.
அதனால், அனைத்து வசதிகளுடன் கூடிய நுாலகம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 151வது வார்டு சின்ன போரூரில், நகர்ப்புற சமூக நல மருத்துவமனை வளாகத்தில், 1.16 கோடி ரூபாயில் நுாலகம் அமைக்கப்படுகிறது.
'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 3,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்த நுாலகத்தில் வாசிப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்நுாலகத்தை, மாநகராட்சியே பராமரிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement