அமராவதி ஆற்றில் வாளுடன் சுற்றி திரிந்த 2 பேருக்கு 'காப்பு'
கரூர், கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட, நேற்று முன்தினம் இரவு கரூர் வஞ்சியம்மன் கோவில், அமராவதி ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இரண்டரை அடி நீளமுள்ள வாளுடன் சுற்றி திரிந்த வெங்கமேட்டை சேர்ந்த சந்தோஷ் குமார், 43; கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார், 24, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்த பாண்டி,27, என்பவரையும், கரூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement