விபத்தில் 2 பேர் பலி

மதுரை : மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் காளவாசல் மேம்பாலத்தின் கீழ் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பைக்கில் ஹாஜிமார் தெரு ஹைதர்அலி என்ற அப்பாஸ் 35, நண்பர் லாரன்ஸ் ஆகியோர் சென்றனர். பைக் மீது பஸ் மோதியதில் ஹைதர்அலி மீது பஸ் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த லாரன்ஸ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லாரி மோதி பலி



வில்லாபுரத்தில் பைக்கில் சென்ற டீ மாஸ்டர் ரகுபதி 45, மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement