நிலையூர் கால்வாயில் கொட்டிய கழிவுகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய்களில் செடி, கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
பாணாங்குளம் கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயில் விளாச்சேரியில் இருந்து ஹார்விபட்டி வரையான பகுதிகளில் செடிகள் வளர்ந்து நிற்கின்றன. இந்த கால்வாய் பகுதியை ஒட்டி வசிப்போர், குடியிருப்புகளில் சேரும் குப்பையை கால்வாய்க்குள் கொட்டுகின்றனர். இதனால் கால்வாய்க்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கிடக்கிறது.
கால்வாய் தடுப்புச்சுவரை உயர்த்தும் பணிகள் நடக்கிறது. அதனால் கால்வாயை ஒட்டி இருந்த மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. வெட்டிய கிளைகளை கால்வாய்க்கால் போட்டுச் சென்றுள்ளனர். இவை அழுகி விரைவில் துர்நாற்றம் எடுக்கும்.
வைகை அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இந்தச் செடி, கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும்
-
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!
-
பதவிக்காக சமூக நீதியை பலி கொடுக்கும் தி.மு.க. அரசு: அன்புமணி விளாசல்
-
வணிக இடத்தில் மனை வாங்கி வீடு கட்டுவதால் பாதகங்கள் என்னென்ன?
-
இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி
-
சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 சரிவு; இன்றைய நிலவரம்!