இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

15


புதுடில்லி: எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தி, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்நேரத்தில் இந்திய ஜனநாயகத்தையே காங்கிரஸ் அரசு கைது செய்தது போல் இருந்தது.


அவசர காலத்தின் இருண்ட நாட்களால் பாதிக்கபட்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர வேண்டும். அப்போது தான், 1975-1977ம் ஆண்டு வரை இடையிலான அவமானகரமான காலம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது நான் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தேன்.


ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை அவசர நிலை உறுதிப்படுத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement