பிரதமர் சூரிய வீடு மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு
விருதுநகர் : மின் பகிர்மானம் மேற்பார்வை பொறியாளர் லதா செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. மின் கட்டண ரசீது மட்டுமே பதிவேற்றம் செய்து இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மொபைல் செயலி பி.எம்.சூர்யா கர், க்யூ.ஆர்.டி பி.எம்.சூர்யா கர், www.pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.in என இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பதியலாம். மேலும் விரும்பிய விற்பனையாளர்களை மின் நுகர்வோரே இணையத்தளம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம். 1 கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30 ஆயிரம் மானியம், 2 கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.60 ஆயிரம் மானியம், 3 கிலோ வாட் அதற்கு மேல் சூரிய தகடு பொருத்த ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். வங்கி கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். ஒரு கிலோ வாட் சூரிய தகடு ஒரே நாளில் 4 முதல் 5 யூனிட்டுகள் வரை மின் உற்பத்தி செய்யும். அனைத்து மின் இணைப்பு உரிமையாளர்களும் பயனடையலாம், என்றார்.
மேலும்
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!