செக் குடியரசு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம்

ஆஸ்ட்ரவா : செக்குடியரசில், 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' சர்வதேச தடகள போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார்.
சமீபத்தில் நடந்த பாரிஸ், டைமண்ட் லீக் தடகளத்தில் நீரஜ் சோப்ரா (88.16) முதலிடம் பிடித்து, பட்டம் வென்றார். இதனால் மீண்டும் இவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இம்முறை முதல் வாய்ப்பில் 'பவுல்' செய்த நீரஜ் சோப்ரா, அடுத்து 83.45 மீ., துாரம் எறிந்தார். 3வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.29 மீ., துாரம் எறிந்தார். 4, 5வது வாய்ப்பில் (82.17, 81.01) ஏமாற்றிய இவர், கடைசி வாய்ப்பை பவுல் செய்தார். இருப்பினும் நீரஜ் சோப்ரா முதலிடம் (85.29 மீ.,) பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் தவ் ஸ்மித் (84.12 மீ.,), கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (83.63 மீ.,) இரண்டு, மூன்றாவது இடம் பிடித்தனர்.

மேலும்
-
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
-
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்