பெண்ணுக்கு தொல்லை பி.ஜி., உரிமையாளர் அதிரடி கைது
மைகோ லே - அவுட் : ஆந்திராவை சேர்ந்த 25 வயது இளம்பெண், பி.டி.எம்., லே - அவுட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த 21ம் தேதி வேலை முடிந்ததும் அறைக்கு வந்தார். அவர் அறையில் வைத்திருந்த தங்க மோதிரம் காணாமல் போனது.
இதுபற்றி தங்கும் விடுதி உரிமையாளர் ரவிதேஜா ரெட்டி, 45, என்பவருக்கு தகவல் கொடுத்தார். இளம்பெண்ணின் அறைக்கு வந்த அவர், காணாமல் போன மோதிரத்தை கண்டுபிடிக்க உதவுவதாக கூறி, இளம்பெண்ணுடன் சேர்ந்து அறை முழுதும் தேடினார்.
அப்போது இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, இதுபற்றி வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ரவிதேஜா ரெட்டி மீது இளம்பெண், மைகோ லே - அவுட் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிதேஜா ரெட்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக பதிவு!
-
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
-
ஈஷாவில் '26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின' விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
-
தலைமுடியில் கலர் கலராக அலங்காரம்: சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
-
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை!
-
நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு