ரசாயன ஆலையில் தீ; டில்லியில் நால்வர் பலி

புதுடில்லி : டில்லி ரோஹினி பகுதியில் ரிதலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஐந்து மாடி கட்டடம் உள்ளது.

ரசாயன ஆலை, பிளாஸ்டிக் பைகள், ரெடிமேட் உடைகள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் செயல்படும் இந்த கட்டடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 16 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முதல் மாடியில் இருந்து நான்கு உடல்கள் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டன; நிதின் பன்சால், 31, ராகேஷ், 30, ஆகிய இருவர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

விரேந்தர் என்பவர் லேசான காயத்துடன் தப்பினார்.

Advertisement