ரசாயன ஆலையில் தீ; டில்லியில் நால்வர் பலி

புதுடில்லி : டில்லி ரோஹினி பகுதியில் ரிதலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஐந்து மாடி கட்டடம் உள்ளது.
ரசாயன ஆலை, பிளாஸ்டிக் பைகள், ரெடிமேட் உடைகள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் செயல்படும் இந்த கட்டடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 16 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, முதல் மாடியில் இருந்து நான்கு உடல்கள் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டன; நிதின் பன்சால், 31, ராகேஷ், 30, ஆகிய இருவர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விரேந்தர் என்பவர் லேசான காயத்துடன் தப்பினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உத்தரகண்டில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் காயம்
-
15 பேருக்கு முதல்வர் காவல் பதக்கம்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக பதிவு!
-
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
-
ஈஷாவில் '26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின' விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
-
தலைமுடியில் கலர் கலராக அலங்காரம்: சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
Advertisement
Advertisement