15 பேருக்கு முதல்வர் காவல் பதக்கம்

சென்னை: போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத்; மதுரை மேலுார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து; தேனி மாவட்டம், குமுளி சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன்; சென்னை சென்ட்ரல் ரயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி; திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுசீந்திரன்; மதுரை கடுமையான குற்றங்கள் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட 15 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் பதக்கம் வழங்குவார்.

Advertisement