குறுகலான சாலையால் சோமங்கலத்தில் நெரிசல்

குன்றத்துார் அருகே சோமங்கலம் - புதுப்பேடு சாலையானது, குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையையும், சோமங்கலம் - தாம்பரம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் முக்கிய சாலை. இந்த வழியே, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்சாலைக்கு, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்த சாலையில், சோமங்கலம் அருகே மேலாத்துார் முதல் சக்தி நகர் வரை, 2 கி.மீ., துாரம் வனப்பகுதி உள்ள இடத்தில், வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காததால், சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. வனப்பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால், இந்த வழியே எதிரெதிரே வாகனங்கள் செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது.

சில நேரங்களில், லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் உள்ளது. எனவே, வனப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

Advertisement