2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

திருப்பத்தூர்: ''2026ம் ஆண்டு மட்டுமல்ல, 2031, 2036ம் ஆண்டாக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் இந்த நாட்டை ஆளப்போகிறோம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.174.39 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பல்வேறு சிறப்புகள் கொண்ட திருப்பத்தூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. பல்வேறு சிறப்புகள் கொண்ட மாவட்டம் திருப்பத்தூர். தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலம் வருவாயை உயர்த்தி வேலைவாய்ப்பு தரும் மாவட்டம் திருப்பத்தூர்.
9.69% வளர்ச்சி
தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
செய்து கொண்டே இருப்போம். அதனால் தான் மக்கள் அன்பை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகம் 9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் உச்சமடைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் 100ல் சுமார் 10% நாம் இருக்கிறோம்.
பணவீக்கம்
சமூக முன்னேற்றம், உயர் கல்வி சேர்க்கையில் முதலிடத்திலும், வறுமையில்லா நிலையை உருவாக்குவதில் இரண்டாம் இடத்திலும், நீடித்த வளர்ச்சி, மருத்துவக் குறியீட்டில் மூன்றாமிடத்திலும் தமிழகம் உள்ளது. பணவீக்கம் குறைந்த மாநிலமாகவும், அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் திகழ்கிறது. தலைநகரில் மட்டுமல்லாது அத்தனை பகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செய்ததே இதற்கு அடிப்படை காரணம்.
2031, 2036ம் ஆண்டு..!
மக்களின் வரவேற்பை பார்க்கும் போது, கொஞ்சம் இருமாப்பு உடன், பெருமையுடன் சொல்ல விரும்புவது, 2026ம் ஆண்டு மட்டுமல்ல, 2031, 2036ம் ஆண்டாக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் இந்த நாட்டை ஆளப்போகிறோம். கடந்த கால ஆட்சியாளர்களால், சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை, தி.மு.க., அரசு 4 ஆண்டுகளில் மீட்டெடுத்துள்ளது.
சுற்றுப்பயணம்
தமிழகத்தை வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறோம். தமிழகத்திற்கு ஓரவஞ்சம் செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. நான் கோட்டையில் இருந்து மட்டும் பணிகளை செய்யவில்லை. மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் சென்று கொண்டு இருக்கிறேன்.
பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் மக்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை பற்றி கவலைப்படுகிறார்கள். இது தான் அவர்கள் அரசியல். தமிழகத்தில் மதத்திற்கு ஆபத்து என்று அ.தி.மு.க.,வை வைத்து கொண்டு பா.ஜ.,வினர் பேசுகிறார்கள். தமிழகத்தில் தற்போது பா.ஜ., கூட்டணிக்கு தான் ஆபத்து.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.










மேலும்
-
நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்
-
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
-
வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
-
அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள் : பதிவு நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
-
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
-
ஜம்முவில் திடீர் வெள்ளம் : 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் மீட்பு