பணம் திருடியவர்கள் கைது

தாண்டிக்குடி: பெரும்பாறையை சேர்ந்தவர் மணிகண்டன் .அலைபேசி வாங்குவதற்காக ரூ. 30 ஆயிரம் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் வத்தலக்குண்டு சென்றுள்ளார்.

இதன்பின் நண்பர்களுடன் மது குடித்துள்ளார். ரூ. 15 ஆயிரம் மாயமானது. தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்த நிலையில் பெரும்பாறையைச் சேர்ந்த ராஜபாண்டி 27, மணிமுத்து 27, அஜித்குமார் 25, திருடியது தெரிய வந்தது. ராஜபாண்டி, மணி முத்துவை போலீசார் கைது செய்தனர். அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement