காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு

சென்னை: தமிழக பா.ஜ.,வில் துணை தலைவர் பதவிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துமாறு, கட்சி மேலிடத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதிருப்தியாளர்களுக்கு பதவிகள் தரும் நோக்கில் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டாலும், காங்கிரசை போல கோஷ்டிகள் அதிகமாகும் அபாயம் இருப்பதாக பா.ஜ., தொண்டர்கள் கருதுகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடப்பதால், அதிருப்தியில் உள்ள கட்சியினரை திருப்திப்படுத்த தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஏற்கனவே மாநில துணை தலைவர் பதவியில் 10 இடங்கள் உள்ள நிலையில், கூடுதலாக இருவரை நியமிக்க அனுமதிக்குமாறு, மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலிடம் சம்மதிக்காததால், பட்டியல் வெளியீடு தாமதமாகிறது.
அதிருப்தி
தமிழக பா.ஜ.,வில் தலைவர் பதவிக்கு அடுத்து 10 துணை தலைவர்கள், 10 மாநில செயலர்கள், நான்கு பொது செயலர்கள், ஒரு பொருளாளர், ஒரு இணை பொருளாளர், ஒரு அலுவலக செயலர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த முறை கூடுதலாக ஒரு பொதுச்செயலர், இரு மாநில செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.
பா.ஜ.,வில் பல ஆண்டுகளாக இருக்கும் சிலர் அதிருப்தியில் உள்ளனர். கட்சியிலும் அவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை; மத்திய அரசிலும் எந்த பதவியும் கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களும் பதவி கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளனர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால், பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களை திருப்திபடுத்த, மாநில பதவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, துணை தலைவர் பதவிகளை, 10க்கு பதில் 12 ஆக உயர்த்துமாறு, மேலிட தலைவர்களிடம் தமிழக பா.ஜ., பொறுப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோஷ்டிகள்
அதை மேலிடம் ஏற்க தயக்கம் காட்டுகிறது. ஆனாலும், தமிழகம் பெரிய மாநிலம் என்பதால், தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள 12 துணை தலைவர் பதவிகளுக்கு ஒப்புதல் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழக பா.ஜ., வட்டாரம் கூறியதாவது:
கடந்த ஆண்டில், ஒரு பொதுச்செயலர், இரு மாநில செயலர்கள் என, மாநில நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல எண்ணிக்கையை உயர்த்த அனுமதி கேட்கப்படுகிறது.
இப்படி ஆண்டுதோறும் அதிகரித்து செல்வது சரியல்ல. இப்படி செய்தால், காங்கிரஸ் கட்சியை போல தமிழக பா.ஜ.,வும் கோஷ்டிகள் நிறைந்ததாக மாறிவிடும்.
இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

மேலும்
-
என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
-
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,