தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
சென்னை:தி.மு.க., அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, த.வெ.க., தலைவர் விஜய் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ரேஷன் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:
கூட்டுறவு, உணவு என, இரு துறை அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் உள்ள 37,000 கடைகளில், 1,500ஐ உணவுத் துறை நடத்துகிறது. மீதி, கடைகளை கூட்டுறவு துறை நடத்துகிறது. இதனால் ஊதிய முரண்பாடு உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள், ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கடிதங்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, தி.மு.க.,வுக்கு அழுத்தம் தர காங்கிரஸ், மார்க்சிஸ்ட், அ.தி.மு.க., - வி.சி., - த.வெ.க., - பா.ம.க., என, 14 முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலம்
-
தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்
-
மதுரை மீனாட்சி கோவில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி., தரிசன ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா: இல்லை என்று கூறி சமாளிக்கிறது வங்கதேசம்