புரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலம்; தறிகெட்டு ஓடிய கோவில் யானைகள்

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ரத யாத்திரையைக் காண கோவிலுக்கு வெளியே ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஆமதாபாத்தில் ரத யாத்திரையில் யானைகள் தறிகெட்டு ஓடியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், இன்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோவிலுக்கு இழுத்துவரப்படும்.
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சமூக வலைதளத்தில்
வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.
@block_P@
அதேபோல் மேற்குவங்கம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் ரத யாத்திரை விமர்சையாக நடந்து வருகிறது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள காதியா பகுதியில் ரத யாத்திரையின் போது அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலமும் நடந்தது.
அப்போது அங்கிருந்த இளைஞர் விசில் ஒலி எழுப்பியதால் ஒரு யானை மிரண்டு அங்கிருந்து மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடியது. பின்னர், யாத்திரையில் பங்கேற்ற யானைகள் தறிகெட்டு ஓடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் பீதி அடைந்தனர். block_P

மேலும்
-
மான்செஸ்டர் சிட்டி அணி 'ஹாட்ரிக்': யுவென்டஸ் அணியை வீழ்த்தியது
-
அமாலவின் கனவு மெய்ப்பட்டது.
-
எஸ்சிஓ மாநாடு கூட்டறிக்கையில் ராஜ்நாத் கையெழுத்திடாதது சரி: ஜெய்சங்கர் உறுதி
-
இ.பி.எஸ்., தேர்தல் சுற்றுபயணம்: ஜூலை 7ல் கோவையில் துவக்குகிறார்
-
தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு
-
சுற்றுலா சோகமாக மாறியது; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 18 பேர்; 7 பேர் உயிரிழப்பு