கமேனியை கொல்ல திட்டம்: ஒப்புக் கொண்டது இஸ்ரேல்

டெல் அவிவ்: '' ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார்,'' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அந்நாட்டு டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம். இதனை அறிந்து கொண்ட அவர், நிலத்துக்கு அடியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கினார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதில் வந்தவர்களுடனான தொடர்பையும் அவர் துண்டித்து கொண்டார். இதனால், எங்களது முயற்சி சாத்தியம் இல்லாமல் போனது.
போரின் போது, தீவிரமாக அவரை தேடினோம். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. தலைமையை மாற்றுவதே நோக்கம். கமேனியை கொல்வதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏதும் தேவையில்லை. இவ்வாறு காட்ஸ் கூறினார்.
ஈரான் தயாரிக்கும் அணுஆயுதங்களினால், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என குற்றம்சாட்டிய இஸ்ரேல் அந்நாடு மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் முக்கிய படை தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தப் போர் 12 நாட்கள் நீடித்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டின் பேரில், போர் நிறுத்தம் அமலானது குறிப்பிடத்தக்கது.


மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 72 பேர் பலி
-
மான்செஸ்டர் சிட்டி அணி 'ஹாட்ரிக்': யுவென்டஸ் அணியை வீழ்த்தியது
-
அமாலவின் கனவு மெய்ப்பட்டது.
-
எஸ்சிஓ மாநாடு கூட்டறிக்கையில் ராஜ்நாத் கையெழுத்திடாதது சரி: ஜெய்சங்கர் உறுதி
-
இ.பி.எஸ்., தேர்தல் சுற்றுப்பயணம்: ஜூலை 7ல் கோவையில் துவக்குகிறார்
-
தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு