சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்

6

அகர்தலா: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 5 பேர் திரிபுராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.


மேற்கு திரிபுரா மாவட்டத்தில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். மேற்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக நான்கு பெண்கள் உட்பட ஐந்து வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.


அவர்களுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தினரை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.


அதேபோல், கிழக்கு அகர்தலாவில் உள்ள நார்த்கேட் பகுதியில், சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச பெண்கள் இரண்டு பேரும், ஒரு இந்திய தரகரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


அதேபோல், கோவாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வெளிநாட்டினர் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement