கிடங்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம் : கிடங்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் கிடங்கல்(2) பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த 16ம் தேதி பந்தக்கால் நடுதலுடன் துவங்கியது., தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று இரண்டாம் கால பூஜைக்கு பிறகு, காலை 9.45 மணியளவில், மாரியம்மனுக்கு கும்பாபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கு நன்னீராட்டும் நடந்தது.
விழாவில், அர்ஜூனன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், வழக்கறிஞர் ரங்கராஜன், நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், தீபாவிக்னேஷ்வர் சிங், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement