போதைக்கு ஒருவர் பலி

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் அதிக குடி போதையால் ஒருவர் இறந்தார்.

மேல்மலையனுார் ஜெயின் கோவில் அருகே கடந்த 25ம் தேதி இரவு 9:00 மணிக்கு ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், நீலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், 44; என்பதும், அதிக குடிபோதையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அவரது அண்ணன் ஏழுமலை, 52; அளித்த புகாரின் பேரில், மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement