கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட பூஜை
அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள, காலபைரவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பக்தர்கள் தங்கும் விடுதி, 1.79 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. தற்போது, அந்த இடத்தில் விடுதிக்கான சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட கோவில் நிதியிலிருந்து, 56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், தர்மபுரி தி.மு.க.,-
எம்.பி., மணி, பா.ம.க., -
எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகியோர் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தனர். தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், காலபைரவர் கோவில் செயல் அலுவலர் புனிதராஜ், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தேவகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
Advertisement
Advertisement