மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 60,740 கன அடியில் இருந்து 73,452 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஜூன் 28) காலை 8 மணி நிலவரப்படி 116.8 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது 60,740 கன அடியில் இருந்து 73,452 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து 22,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 116.89 அடியாக உயர்ந்த நிலையில், நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக உள்ளது.
கிடுகிடு உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும், தொடர் மழையால், பொள்ளாச்சி ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 110.7 அடிக்கு தண்ணீர் உள்ள நிலையில் 161 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்வரத்து சரிவு
தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 88 ஆயிரம் கன அடியில் இருந்து 78 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அதேநேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை