பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டி கடைகள் மற்றும் தரைக்க-டைகளை, டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்-தியதால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், வாக்குவாதத்தில் ஈடு-பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்துக்கு இடையூறாக வழிப்பாதையை ஆக்கிரமித்து தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுவதாக, டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு புகார் சென்றது.
புகாரை தொடர்ந்து, டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மதியம், 3:00 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், டவுன் பஞ்., அலுவ-லர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும்
-
அ.தி.மு.க., விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
-
கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
-
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் தார்ச்சாலையாக மாறாத அவலம்