'போக்சோ வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்'
தர்மபுரி: ''போக்சோ வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், மாநில அளவில் தலைமை ஆசிரியர்களுக்கு அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் மகேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில், தர்மபுரி மாவட்டம் கல்-வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அடைவு தேர்வில், தர்ம-புரி மாவட்டம் பின் தங்கியுள்ளது. இதில், முன்னேற்றம் அடைய மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் பாடங்களை கற்பிக்க வேண்டும். ஆய்வு கூட்டத்தில், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். அதை முழுமை-யாக உணர்ந்து, தலைமை ஆசிரியர்கள் அவர்களுடைய தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், 2,346 இடைநிலை ஆசிரியர்கள் ஜூலை மாதத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். தர்மபுரி உட்பட காலி பணியி-டங்கள் அதிகமுள்ள, வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் அதிகப்-படியாக நியமிக்கப்பட உள்ளனர்.
போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம். குற்றம் நிரூபிக்கப்ப-டாமல், மீண்டும் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். பொய்யான புகார்கள் வருவதால், அதை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நல்ல ஆசிரியர்களும் மன வேத-னைக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்கின்றனர்.
போக்சோ உள்ளிட்ட குற்றங்கள் குறித்து உண்மை கண்டறியப்-பட்டால், கருணை மற்றும் பாரபட்ச மின்றி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டம், இலக்கி-யம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மோதல் குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிடப்பட்-டுள்ளது. இவ்வாறு கூறினார்.
மாவட்ட கலெக்டர் சதீஷ், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தனசேகர் உட்பட பலர் உடனி-ருந்தனர்.
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு