வீடு தேடிவந்து 'சீறிய' சிறுசுகளுக்கு 'காப்பு'
பவானி: பவானியில் வீடு தேடிவந்து தாக்குதலில் ஈடுபட்ட, மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்த நிலையில், இருவரை தேடி வருகின்றனர்.
பவானி, மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த, 18 வயது கல்-லுாரி மாணவி, 16 வயது சிறுவனுடன் பேசி பழகினார். சில மாதங்களாக பேசுவதை தவிர்த்த மாணவி, வேறு ஒருவருடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், மாணவியை சந்தித்து பேசியபோது தாக்கியுள்ளார். இதைப்பார்த்த மாணவியின் வீட்டருகே வசிக்கும் பட்டாபி-ராமன், 40, சிறுவனை தடுத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திர-மடைந்த சிறுவன், ஐந்து சிறுவர்களுடன் அன்றிரவே பட்டாபி-ராமன் வீட்டுக்கு சென்று தாக்கியுள்ளான். இதை தடுத்த இருவ-ரையும் தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான புகா-ரின்படி, பவானி போலீசார் மூன்று சிறுவர்களை நேற்று கைது செய்தனர். இருவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
Advertisement
Advertisement