கரூர் மாநகராட்சி கூட்டத்தில் 108 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில், 108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கரூர் மாநகராட்சி கூட்டம், மேயர் கவிதா தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் துணை மேயர் சரவணன் பேசுகையில்.'மாநகராட்சி பகுதியில், புதிதாக தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கிறது. அந்த பகுதிகளில், மக்கள் பிரதிநிதிகள் பெயர் அடங்கிய கல்வெட்டுகள் அமைக்க வேண்டும்,' என்றார்.மண்டல குழு தலைவர் ராஜா, 'மாநகராட்சியில், மண்டல குழு தலைவர் அலுவலகங்களை திறந்து வைத்த, எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு நன்றி. புதிய அலுவலகங்களில், பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை போட வேண்டும்.' என்றார்.
மண்டல குழு தலைவர் சக்திவேல்,'புதிய மண்டல குழு தலைவர் அலுவலகங்களில், பணியாளர்களை அனுமதிக்க வேண்டும். பெரும்பாலான பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகத்தில்தான் உள்ளனர்,' என்றார்.
கமிஷனர் சுதா, 'மண்டல அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர்கள், அந்தந்த அலுவலகங்களில் தான் இருப்பார்கள். மீட்டிங் இருந்தால் மட்டும் தான், மைய அலுவலகத்துக்கு வருவர். மாநகராட்சி பகுதிகளில், மின் விளக்குகள் அமைக்க, மூன்று கோடியே, 38 லட்ச ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், மின் விளக்குகள் அமைக்கப்படும்,' என்றார்.
பிறகு, சாதாரண கூட்டத்தில் வளர்ச்சி பணிகள், செலவினங்கள் தொடர்பாக, 58 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில், திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைப்பது தொடர்பான தீர்மானம் உள்ளிட்ட, 50 தீர்மானங்கள் உள்பட, 108
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி