கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில கவுரவ பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் விற்பனை செய்யும் முறையை நீக்க வேண்டும், அனைத்து பொருட்களும் சரியான எடையில், விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் வெளிப்பணி மூலம் உதவியாளரை பணியில் அமர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுமுறை நாட்களில் நகர்வு பணியை முற்றிலும் கைவிட வேண்டும், பதவி உயர்வில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும், பதவி உயர்வில் எழுத்தர் பணிக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் கதிரவன், துணைத்தலைவர்கள் சங்கர லிங்கம், ராமமூர்த்தி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் செல்வ ரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு