ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொது மக்கள் கடும் அவதி
குளித்தலை: குளித்தலை அருகே, மருதுார் ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
குளித்தலை அடுத்த மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை பணி, 2024 ஜூன் 20ல் துவங்கியது. கடந்த மாதம் பணி நிறைவு பெறாமல், அவசர கதியில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தினமும் காலை நேரத்தில், குகை பாதையில் தண்ணீர் ஊற்றெடுத்து, 1 அடி ஆழத்தில் தேங்கி நிற்கிறது.இதனால் தினந்தோறும் காலையில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்கு செல்வோர் குகை பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கி பாதிக்கின்றனர். மழை காலத்தில் மேலும் தண்ணீர் தேங்கினால், மக்கள் கடும் அவதிப்படுவர். எனவே, ரயில்வே நிர்வாகம் குகை வழிப்பாதையில், தண்ணீர் தேங்காத வகையில், சரி செய்யும் பணியில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
அ.தி.மு.க., விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
-
கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
-
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் தார்ச்சாலையாக மாறாத அவலம்