பல்கலை பதிவாளரை மாற்ற 'மூபா' தீர்மானம்
மதுரை: 'மதுரை காமராஜ் பல்கலை பதிவாளரை (பொறுப்பு) மாற்றி சீனியர் பேராசிரியருக்கு பொறுப்பு வழங்க வேண்டும்' என பல்கலை பேராசிரியர்கள் சங்கம் (மூபா) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பல்கலையில் இச்சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் முனியாண்டி, பொருளாளர் சண்முகையா முன்னிலை வகித்தனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம்:
பல்கலையில் சம்பளம் வழங்க முடியாதது உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் பதிவாளரால் ஒரு பிரச்னையை கூட தீர்க்க முடியவில்லை. பல்கலை பிரச்னைகளை உரிய முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடியாமல் தடுமாறுகிறார். இவரை மாற்றம் செய்து தகுதியுள்ள மூத்த பேராசிரியருக்கு 'கூடுதல் பொறுப்பு' வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் விபரம் உயர்கல்வி அமைச்சர் கோவி செழியனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
அ.தி.மு.க., விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
-
கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்