நல்லதங்காள் கோயில் புனரமைப்பு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அணைக்கரைப்பட்டி லட்சுமணப் பெருமாள். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:அணைக்கரைப்பட்டி, அர்ஜூனாபுரம் இடையே பெரியகுளம் கண்மாய் அருகே நல்லதங்காள் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
புனரமைப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கோயில், அணைக்கரைப்பட்டி, அர்ஜூனாபுரத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதை உறுதி செய்யக்கோரி அறநிலையத்துறை உதவி கமிஷனர், கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு,'புனரமைப்பு பணி நடக்கிறது,' என தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு