மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு

மதுரை: மதுரை கீழப்பனங்காடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 583வது புதிய கிளை திறக்கப்பட்டது.

துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு மதுரையில் கீழப்பனங்காடி, கோவையில் ஜமீன் ஊத்துக்குளி, திருப்பூரில் மங்கலம், திருநெல்வேலியில் கிருஷ்ணாபுரம், நாமக்கல்லில் மோகனுார் என 5 புதிய கிளைகள் நேற்று திறக்கப்பட்டன.

கீழபனங்காடி கிளையை ஓய்வு ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ராஜா கிளைமாக்ஸ் திறந்து வைத்தார். வங்கியின் தலைமை செயல் அதிகாரி சலீ நாயர் பேசுகையில், ''தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நுாறாண்டுகளைத் தாண்டி வாடிக்கையாளர் சேவையில் சரித்திரம் படைத்து வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டும் வங்கியாகவும் உள்ளது. இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 582 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களை கொண்டுள்ளது. வங்கிக்கு 53 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். நாடு முழுவதும் மேலும் அதிக கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

Advertisement