இடமாறுதல் கவுன்சிலிங் ஆசிரியர்கள் 'லீவில்' செல்ல உத்தரவு

சிவகங்கை : தொடக்க கல்வி துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், ஜூலை 2 முதல் 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது. 38,000 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

'கவுன்சிலிங் நடைபெறும் நாட்களில், அதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தான் செல்ல வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையின்படி, ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆசிரியருக்கு, மீண்டும் அதே பள்ளியை வழங்கக்கூடாது' என, தொடக்க கல்வி துறை தெரிவித்துள்ளது.

Advertisement