கோவை, நீலகிரியில் இன்று கனமழை

சென்னை: 'கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரம் அடைந்துஉள்ளது.
நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 12 செ.மீ., மழை; நீலகிரி மாவட்டம் விண்ட் வெர்த் எஸ்டேட், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர் விளையில் தலா 11 செ.மீ., மழை; கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, கோவை வால்பாறை பகுதியில், தலா 9 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
இதேபோல, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர் மாவட்டங்களில், சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 3ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி மின்னலுடன் மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்