ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு

11

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக சேர, நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திரைத்துறையில் சிறந்த படைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் - நடிகையருக்கும் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர்



'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ்' என்று அழைக்கப்படும் ஆஸ்கர் அகாடமி இந்த விருதை வழங்குகிறது.


ஆண்டுதோறும் விருதுக்காக தேர்வு செய்யப்படும் குழுவில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதை ஆஸ்கர் அகாடமி வழக்கமாக வைத்துஉள்ளது.



அந்த வகையில், அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்ய புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுதும் இருந்து, 534 பேருக்கு உறுப்பினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இவர்கள் இருவரைத் தவிர, நம் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா, திரைப்பட தயாரிப்பாளர் பாயல் கபாடியா ஆகியோரும் உறுப்பினர்களாக சேர ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்து உள்ளது.

எளிதானது அல்ல



இவர்கள் அனைவரும் உறுப்பினராக சம்மதித்தால், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 11,120 ஆகவும், ஓட்டளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும்.



ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக சேர்வது என்பது, அந்த விருதுக்கு விண்ணப்பிப்பது போல் எளிதானது அல்ல.

Advertisement