பள்ளி சமையலறையில் காஸ் சிலிண்டர் வெடிப்பு

வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம், பாலப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியின் சமையல் கூடத்தில், காலை சிற்றுண்டி சமைத்த போது, காஸ் சிலிண்டர் வெடித்து கட்டடம் சேதம் அடைந்தது. அப்போது, பணியாற்றிய சமையலர்கள் வெளியே ஓடியதால் உயிர் தப்பினர்.
பாலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க, காலை 8:00 மணிக்கு சமையலர் லட்சுமி, கங்கா தேவி சமையல் செய்தனர்.
அப்போது காஸ் தீர, புதிய சிலிண்டரை எடுத்து, ரெகுலேட்டரை மாட்டி அடுப்பை பற்ற வைக்கும் போது தீப்பற்றியது.
அதை அறிந்ததும் சமையலர் இருவரும் வெளியே ஓடி உயிர் தப்பினர். சில வினாடிகளில், பயங்கர சத்தத்துடன் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. உள்ளிருந்த பொருட்களுடன் கட்டடமும் சேதமாகின.
வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். இதை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு