ரூ.4 லட்சம் மோசடி செய்தவரின் தம்பியை கடத்திய கும்பல் கைது
விளாங்குடி: மதுரை விளாங்குடியை சேர்ந்தவர்கள் வெள்ளைப்பாண்டி, முரளி மணிகண்டன். இருவரும் ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறினர். இவர்களை நம்பி திருச்சி சசிகுமார், தேவராஜ் ஆகியோர் ஆன்லைன் டிரேடிங் செய்தனர்; வெள்ளைப்பாண்டி, முரளி மணிகண்டனிடம் 4 லட்சம் ரூபாய் கொடுத்தனர். முரளி மணிகண்டன் மோசடி செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், தேவராஜ், நண்பர்கள் விஜய், விக்னேஷ், பிரதாப் ஆகிய ஐந்து பேரும் வெள்ளைப்பாண்டியை சந்திக்க மதுரை வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவர் தலைமறைவானதால், அவரின் தம்பி ரத்னவேல்பாண்டியை காரில் கடத்தினர். இதுதொடர்பாக கூடல்புதுார் போலீசில் அவர் புகார் அளித்தார்.
விளாங்குடி பகுதியில் காரில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் விரட்டி பிடித்து ரத்னவேல் பாண்டியனை மீட்டனர். இதில் சசிக்குமார், விஜய், விக்னேஷ், தேவராஜ் ஆகியோரை கைது செய்தனர். பிரதாப் தப்பினார். அவரை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.
மேலும்
-
5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்