மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பைக்கில் பயணித்த நண்பர்கள் இருவர் நான்கு வழி சாலை மீடியனில் மோதி பலியாயினர்.
நாகர்கோவில் அருகே பறக்கை ரோட்டை சேர்ந்தவர் ரெயான் முகமது 20. இவரது நண்பர் வடக்கு சூரன் குடியைச் சேர்ந்த ஷபான்சிராஜ் 20. டிப்ளமோ முடித்திருந்தனர். நேற்று அதிகாலை 2:00 மணியளவில் இருவரும் பைக்கில் காவல்கிணறில் இருந்து நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திருப்பதிசாரம் டோல்கேட் அடுத்து திருப்பதிசாரம் திருப்பத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், நான்குவழிச்சாலையில் மீடியனில் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து பலியாயினர். ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Advertisement
Advertisement