வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு 25 கண்மதகு வடிகால் வாய்க்காலில் புதர்களை அகற்றி துார்வார வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு கூட்ரோடு அருகில் 25 கண்மதகு வடிகால் வாய்க்கால் உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து மழை, வெள்ளக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீர் வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வெள்ளாறுராஜன் வாய்க்காலில் திறந்து விடப்பட்டு 25 கண் மதகு வழியாக செல்கிறது.
இ்நிலையில், வாய்க்கால் துார் வாரப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், ஆங்காங்கே செடிகள், மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மழைக் காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் 25 கண்மதகு வடிகால் வாய்க்காலில் புதர்களை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
Advertisement
Advertisement