கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : புதுச்சேரியில் ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். முனீந்திரபாபு, பிரேமதாசன், ரவிச்சந்திரன், பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுரவ தலைவர் நடராஜன், மின்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாளர் மணி, காவல்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாளர் சேகர் ஆகியோர் கண்டன் உரையாற்றினர்.
புதுச்சேரி அரசில் பணி செய்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சங்க பொருளாளர் ஞானசேகர் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement