காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

நாக்பூர்: '' நாட்டை ஒற்றுமையாக வைத்து இருக்க அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பை உருவாக்கினார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு என தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒரு போதும் ஆதரிக்கவில்லை, '' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் கூறினார்.
நாக்பூரில் நடந்த அரசியலமைப்பு முன்னுரை பூங்காவின் தொடக்க விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஆதரித்த அதே வேளையில், அம்பேத்கரின் ஒற்றை அரசியலமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையிலிருந்து சுப்ரீம் கோர்ட் உத்வேகம் பெற்றது.
அம்பேத்கர் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே அரசியலமைப்பைக் கற்பனை செய்தார், ஒரு மாநிலத்திற்கு தனி அரசியலமைப்பு என்ற யோசனையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
370வது விதி தற்காலிகமானது. 2019ல் இதை ரத்து செய்தது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதே.இந்த மாற்றம் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்து நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தியது. இவ்வாறு கவாய் பேசினார்.










மேலும்
-
சைபர் கிரைம் ஒரு வகை நிழல் போர்;அதை தடுக்க நவீன உத்தி தேவை: சொல்கிறார் திரிபுரா முதல்வர்
-
ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் உரையாடிய சுபான்ஷூ சுக்லா!
-
மரக்கிளை முறிந்து மாணவன் பரிதாப மரணம்
-
ஒழுங்கான வாழ்க்கை முறையின் தேவையே உடற்பயிற்சி
-
எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பின் முகவுரை மாற்றம்: துணை ஜனாதிபதி பேச்சு