மரக்கிளை முறிந்து மாணவன் பரிதாப மரணம்

1

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் பள்ளியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 11ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காங்கேயம், சவுடாம்பிகை நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மகன் அக்சயன் (15), 11ம் வகுப்பு கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வருகிறார்.

இன்று( ஜூன் 28) மாலை 4 மணியளவில் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.அப்போது அங்குள்ள வேப்ப மரக்கிளை ஒன்று முறிந்து மாணவன் மீது விழுந்துள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து காங்கேயம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement